Wednesday, May 28, 2014


நீச்சல் பழகாதவன்


காலடி மணல் அரிப்பெடுத்து
என் பயணம் நீரோடானது 
முதல் எழும்புதலில் 
அவளை முதன்முறை 
பார்த்த முகத்தை 
உள் விழுங்கினேன் 
இரண்டாம் பயணம் 
சற்றே ஆழமானதானது 
மீண்டும் மேலெழும்பினேன் 
இம்முறை அவளோடிருந்த 
நாட்களும் நினைவுகளும்
என்னுள் இறங்கியது
மேலும் நெடிதான பயணம்
அடியிலுருந்து மேலெழுந்தேன்
கடைசியாக அவளின் அன்பு
என்னுள் தானே இறங்கியது
கடைசி பயணம் சலனமற்று
ஆற்றின் கீழே முடிந்தது
உடலை தேடியெடுத்து
கரையில் போட்டவன் பகன்றது
நீச்சல் பழகாதவன் ஏன்
ஆற்றில் இறங்க வேண்டும் என்பதே

Friday, April 11, 2014

தேடல்களும் காலமும் 


தேடல்களும்
 தேடுமிடங்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடுபவன் மாறவில்லை. 
தேடுபவன் மாறினாலும் 
தேடல்களும் 
தேடுமிடங்களும் காலத்தால் மாறவில்லை.
தேடுபவனும் 
தேடுமிடங்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடல்கள் மாறவில்லை

 தேடுபவனும் தேடல்களும் 
காலத்தால் மாறலாம் 
தேடுமிடங்கள் மாறவில்லை

Friday, March 7, 2014

என்னை பற்றி

நான் ரகுநாதன், சிவில் பொறியாளன், காஞ்சிபுரத்தை சேர்ந்தவன்.  எனக்கென்று ஒரு பக்கத்தை உருவாக்க வேண்டும், அதில் எனக்கு தெரிந்ததை எழுத வேண்டும் என்று மட்டுமே ஆசை. 

பக்க பலமாக இருப்பது வ. மணிகண்டனின் தைரியமான வாசகங்கள்.  பாப்போம் எந்த அளவுக்கு போகிறதென்று. 

எழுதுவது என்று ஆனவுடன் சில முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது.  

௧.   தெரிந்த, தொடர்பில் உள்ள நபர்களை பாதிக்க கூடியதை தவிர்த்தல்.

௨. விவாதம் என்றால் பின் வாங்குதல்.

௩. மற்றவர்கள்  கதை என்றாலும், சொல்லும்பொழுது தன்னிலை படுத்த போகிறேன். பல விஷயங்களில் இது நல்லது என்று படுகிறது.

நேரம் நிறைய உள்ளது, பாப்போம்.

எனக்கு ஆகி வந்த எல்லா கடவுளும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த கடவுளர்களும் துணை நிற்பார்களாக.

நன்றாக போனால் நன்றிகள் சேர வேண்டிய இடம், சுதர்சன், காமாராஜ் மற்றும் வ. மணிகண்டன், தவறு என்றால் என்னை மட்டுமே சாரும்.

நன்றி,
Raghunathan. V. R.